என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குன்னம் வாலிபர் தாக்குதல்"
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மருவத்தூர் காலனி தெருவை சேர்ந்தவர் மணி (வயது 50). இவர் அதே பகுதியில் குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு நீர் ஏற்றும் பணியை செய்து வருகிறார். இவரது மகன் இளைய ராஜா (வயது 23).
அதே பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம், சின்னத்துரை, கிரிபாலன். இவர்கள் 3 பேரும் நேற்று குடிநீர் மேல் நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்த தண்ணீரை வீணாக திறந்து விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து இளையராஜா தட்டிக் கேட்டார். அப்போது செல்வம், சின்னத்துரை, கிரிபாலன் ஆகியோருக்கும் இளையராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்தும் உருட்டுகட்டையால் இளைய ராஜாவை தாக்கினர். இதில் இளையராஜா படுகாயம் அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளையராஜாவை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இளையாராஜாவை கட்டையால் தாக்கிய செல்வம், சின்னத்துரை, கிரிபாலன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்